தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் கார்த்தி.கோலிவுட் சினிமா துறையில் தனது முதல் படமான 2004 ஆம் ஆண்டு வெளியான ஆயுத எழுத்து என்னும் படத்தில் மணிரத்னம் அவர்களுக்கு துணை இயக்குனராக தமிழ் சினிமாவில் களம் இறங்கினார்.மேலும் அதன் பிறகு நடிகராக தமிழில் 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்தி வீரன் என்னும் படம் மூலம் நடிகராக அறிமுகமாகி தமிழ் மக்கள் வரவேற்பை பெற்றார்.தனது முதல் படத்திலேயே பல விருதுகளை வாங்கி குவித்தார்.அதன் பிறகு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து தற்போது தனகென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.மேலும் இவர் சினிமா துறையில் 80 களில் கொடி கட்டி பறந்து வந்த நடிகரான சிவகுமார் அவரின் மகனாவார்.நடிகர் கார்த்தியின் அண்ணனான சூர்யா அவர்களும் முன்னணி நடிகராக இருந்து வருபவர்.இந்நிலையில் இவர் 2011 ஆம் ஆண்டு ரஞ்சினி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே பெண் குழந்தை உள்ள நிலையில் தற்போது மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இவர்கள் இருவருக்கும் ஆண் குழந்தை பிறந்துள்ளது.மேலும் அந்த சுப செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருந்து வருகிறார்கள்.மேலும் அதில் கூறுகையில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு நன்றி எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.மேலும் இந்த நேரத்தில் எங்களுக்கு உதவிய டாக்டர் மற்றும் நர்ஸ்க்கு நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.
Dear friends and family, we are blessed with a boy baby. We can’t thank enough our doctors and nurses who took us through this life changing experience. 🙏🏽 need all your blessings for the little one. Thank you god!
— Actor Karthi (@Karthi_Offl) October 20, 2020