தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு.இவர் மக்கள் மத்தியில் பெரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர்.மேலும் இவர் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல தமிழ் சினிமா ரசிகர்களை தான் வசம் ஈர்த்தவர்.மேலும் இவர் அறிமுகமான முதல் படமான உறவை காத்த கிளி என்னும் அவரது தந்தை இயக்கிய படம் மூலம் அறிமுகமானவர்.மேலும் இவர் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அந்த படத்தின் மூலம் இவருக்கு தமிழ் சினிமாவில் நடிகர் என்ற அங்கிகாரம் கிடைத்தது.
சிம்பு அவர்கள் கதாநாயகனாக நடித்து வெளியான படமான காதல் அழிவதில்லை மூலம் எண்ணற்ற ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.அன்று முதல் இன்று வரை இவருக்கு ஒரு தனி ரசிகர்கள் பட்டாளம் இவரை எந்த இடத்திலும் விட்டு குடுக்காமல் இருக்கிறார்கள்.
நடிகர் சிம்பு என்றால் பல பேருக்கு தெரிந்த விஷயம் பல சர்ச்சைகளில் சிக்கி தவித்து அதில் இருந்து மீண்டு வருபவர்.அண்மையில் கூட இவர் மேல் படபிடிப்பிற்க்கு சரியான நேரத்தில் வராமல் இருக்கிறார் என்ற பல பிரச்சனைகள் இவர் மேல் பாய்ந்தது.அனால் அதை எதையும் பொருட்படுத்தாமல் இவர் தனது வாழ்க்கையை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் தமிழ் சினிமாவில் தற்போது பிரபல நடிகையாக வலம் வரும் நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் நடிகர் சிம்பு அவர்களின் வாழ்கையை போல ஒரு நாளாவது வாழ்ந்து விட வேண்டும் என்ற ஆசை இருக்கு என கூறியுள்ளார்.அவர் கூறுகையில் ஒரு நாள் படபிடிப்பில் அவர் நடிப்பதை பார்த்தேன்.அவர் வந்த கொஞ்சம் நேரத்திலேயே அவர் நடித்து முடித்து விட்டார்.நான் அவரிடம் நடித்து விட்டீர்களா என கேட்டேன்,அதற்கு அவர் முடிந்தது என கூறினார்.நடிக்க வந்தார் ஈஸியாக நடித்து முடித்து விட்டு கிளம்பினர் என கூறியுள்ளார்.