தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருந்து வருபவர் கார்த்தி.இவர் தமிழ் சினிமாவில் குறைந்த படங்களே நடித்து இருந்தாலும் இவர் ஒரு நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேடி தேடி நடித்து வருகிறார்.அந்த வகையில் தற்போது சினிமா துறையில் வளர்ந்து நிற்கும் நடிகர்கள் ஆரம்ப கால கட்டத்தில் பல தோல்வி படங்களை கொடுத்துள்ளர்கள்.மேலும் எதோ ஒரு படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று அதன் மூலமே சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள்.அந்த வகையில் பிரபல தமிழ் சினிமா இயக்குனரான லிங்குசாமி அவர்கள் இயக்கி வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த படம் பையா.
மேலும் இப்படம் 2010 ஆம் ஆண்டு வெளியாகியது.இதில் நடித்த நடிகரான கார்த்தி அவர்களுக்கு இந்த படம் அவரது சினிமா துறையில் பிரேக் கொடுத்த படமாக திகழ்ந்து வருகிறது.அதிலும் குறிப்பாக இதில் பல பிரபலங்கள நடித்து இந்த படத்திற்கு மேலும் வரவேற்பை பெற்று தந்தது.
இதில் கதாநாயகியாக நடித்து இருப்பார் நடிகை தமன்னா.இந்த படத்தில் இவர்கள் இருவரின் ஜோடி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.மேலும் இந்த படத்தை பற்றி அந்த படத்தின் இயக்குனர் லிங்குசாமி பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.அதில் அவர் கூறுகையில் முதலில் தமன்னா நடிப்பதற்கு முன் நாங்கள் நயன்தாராவிடம் தான் பேசினோம்.
ஆனால் சம்பளம் பிரச்சனை காரணமாக அவரால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லை.மேலும் அதன் பின்னரே நாங்கள் தமன்னாவிடம் அணுகினோம்.மேலும் நாங்கள் எதிர்பார்த்ததை விட அந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.