தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை விந்தியா.இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் 1999 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிநடை போட்ட படமான சங்கமம் மூலம் கோலிவுட் துறையில் அறிமுகமானார்.மேலும் அதனை தொடர்ந்து நடிகை விந்தியா அவர்களுக்கு வரிசையாக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.மேலும் இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.நடிகை விந்தியா அவர்கள் மகளிருக்காக கண்ணுக்கு கண்ணாக சார்லி சாப்ளின் சேட்டை போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில் இவர் தமிழ் தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் படங்களை நடித்துள்ளார்.இவர் இறுதியாக நடித்த படமான வட்டப்பாறை படத்திற்கு பிறகு எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.மேலும் நடிகை விந்தியா அவர்கள் தற்போது நடந்து முடிந்த தேர்தல் பிரச்சாரத்தின் போது கலந்து கொண்டார்.
மேலும் தற்போது அணைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சரதிற்காக சினிமா பிரபலங்களை பேச்சாளராக வைத்து வருகின்றனர்.மேலும் அதனை தொடர்ந்து தற்போது விந்தியா அவர்கள் தற்போது கட்சி ஒன்றிற்கு பேச்சாளராக இருந்து வருகிறார்.
அரசியல் களம் என்றாலே அதில் சர்ச்சைக்கு பஞ்சமே இல்லை.அந்த வகையில் தற்போது நடிகை விந்தியாவிற்கு சிலர் கண்ணீர் அஞ்சலி போஸ்டரை வெளியிட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டரை கண்ட விந்தியா அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.அதில் அவர் உலகத்துலையே தனது கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பார்த்து சிரிக்கிற பாக்கியம் கிடச்சவங்கள்ள நானும் ஒருத்தி என கூறியுள்ளார்.மேலும் இந்த மாறி போஸ்டர் எல்லாம் பார்த்த ஆய்சு கூடுமாம் என பதிவிட்டுள்ளார்.அந்த பதிவு கீழே உள்ளது.
உலகத்துலயே தன்னோட கண்ணீர் அஞ்சலி போஸ்டர பாத்து தானே சிரிக்குற பாக்கியம் கிடைச்சவங்கள்ல நானும் ஒருத்தி. ஸ்டாலினுக்கு வருங்கால முதல்வரேனு போஸ்டர் போட்டு அலுத்து போயிட்டாங்க போல. இந்தமாறி போஸ்டர் பார்த்தா ஆயுசு கூடுமாம். ஆண்டவனை தவிர எனக்கு என்ட் கார்டு போட எவனாலயும் முடியாது ராசா. pic.twitter.com/Zsie6obR86
— Vindhyaa (@vindhyaAiadmk) April 27, 2021