2013 ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படம் மூலம் துணை நடிகையாக அறிமுகமாகி பின்பு அதன் பிறகு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து முன்னணி நடிகையாக வளம் வருகிறார் நடிகை சாக்ஷி.இவர் வெள்ளித்திரையில் நடிக்க வருவதற்கு முன்பு இவர் பிரபல மாடலாக இருந்துள்ளார்.மேலும் ராஜா ராணி படத்திற்கு பிறகு இவர் தமிழ் மக்கள் மனதில் இடம் பிடித்து அதன் பின்னர் இவர் பல படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்து வெளியான படங்களான காலா,விஸ்வாசம்,யூகன் என வரிசையாக வெற்றி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.மேலும் நடிகை சாக்ஷி அவர்கள் தமிழ் சின்னத்திரையில் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளராக களம் இறங்கினார்.அதன் பின்னர் அந்த வீட்டிற்குள் இருக்கும்போது இவருக்கும் கவின் என்பவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.
அனால் அதன் பின்னர் இவர்கள் இருவரும் பிரிந்தனர்.இந்நிலையில் பல பிக்பாஸ் பிரபலங்கள் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து பிஸியாக இருந்து வருகிறார்கள்.நடிகை சாக்ஷி அவர்கள் அண்மையில் கலந்து கொண்ட அளித்த பேட்டி ஒன்றில் அவரது காதலை பற்றி கூறியுள்ளார்.
நான் கல்லூரி படிக்கும் போது நானும் எனது சீனியர் ஒருவரும் காதலித்து வந்தோம்.எங்கள் கல்லூரி நிர்வாகம் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட் என்பதால் எங்களுக்குள் அவ்வளவாக் ரொமான்ஸ் கிடையாது.எனக்கு முன்பு படிப்பை முடித்து விட்டு கல்யாணத்தை பற்றி பேசினார்.நான் சில லட்சியங்களை வைத்து இருந்ததால் நான் மறுத்து விட்டேன் என கூறியுள்ளார்.
Home சினிமா செய்திகள் “நான் அவனை மூன்று வருடங்கள் காதலித்து வந்தேன்” முதல் முறையாக தனது காதலை பற்றி பேசிய...