தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருந்தாலும் ஒரு சில நடிகைகள் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுவார்கள்.அவர்கள் படங்களில் நடிக்கவில்லை என்றாலும் அவர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருக்க தான் செய்கிறது.அவ்வாறு தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருந்து வருபவர் நடிகை கயல் ஆனந்தி.இவர் தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களே நடித்து இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக இருந்து வருகிறார்.இவர் சினிமாவில் அடிஎடுத்து வைத்த முதல் படமான தெலுங்கு சினிமாவில் வெளியான படத்தில் ஒரு பாடலில் சிறு வேடத்தில் நடித்து இருப்பார்.அதன் பிறகு மக்கள் மத்தியில் பிரபலமடைந்து பிறகு தெலுங்கு சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.மேலும் நடிகை ஆனந்தி அவர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படம் 2014 ஆம் ஆண்டு ஹரிஷ்கல்யாண் நடிப்பில் வெளியான பொறியாளன் மூலம் அறிமுகமானார்.அந்த படத்தின் மூலம் மத்தியில் வரவேற்பை பெற்று பிறகு வரிசையாக படங்களில் நடிக்க தொடங்கினார்.
இவர் கயல் படத்தில் நடித்து அதற்காக சில விருதுகளை பெற்றுள்ளார்.அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் கயல் ஆனந்தி என மாற்றிகொண்டார்.மேலும் இவர் அதன் பிறகு சில ஹிட் படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.இந்நிலையில் நடிகை கயல் ஆனந்தி அவர்களுக்கு திருமணம் நடக்க போவதாக கூறிவருகிறார்கள்.
அதாவது தெலுங்கானாவை சேர்ந்து சாக்ரடிஸ் அவர்களுக்கும் ஆனந்தி அவர்களுக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக அதவும் இது காதல் திருமணம் இல்லாமல் பெற்றோர்கள் பார்த்து நடத்தி வைக்கும் திருமணமாம்.இவரது திருமணம் இன்று இரவு நடக்க போவதாகவும் சினிமா வட்டாரங்களில் யாருக்கும் அழைக்கவில்லை எனவும் செய்திகள் வெளியாகி வருகின்றனர்.