தமிழ் சினிமாவில் ரசிகைகளின் பெரும் ஆதரவு பெற்ற நடிகர்கள் பட்டியலில் இருக்கும் நடிகர் அதர்வா.இவர் தமிழில் பல பெண்களில் மத்தியில் கனவு கண்ணனாக இருந்து வருபவர்.இவர் கோலிவுட் துரையின் முன்னணி நடிகரான முரளி அவர்களின் மகனாவார்.மேலும் இவர் தமிழில் வளர்ந்து வரும் நடிகர்கள் பட்டியலில் இடம் பிடித்து வருகிறார்.2010 ஆம் ஆண்டு மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்ற படமான பானா காத்தாடி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகினார்.மேலும் அதன் பிறகு படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து தற்போது ரசிகர்கள் பட்டாளத்தை தான் வசம் வைத்துள்ளார்.
இவர் பிறகு பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.அதர்வா அவர்கள் நடித்து வெளியான படமான கோ, பரதேசி, ஈட்டி, இமைக்க நொடிகள் என பல படங்களில் நடித்துள்ளார்.தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு சினிமா துறையிலும் சில படங்களை நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் அதர்வா அவர்களுக்கு திருமணம் நடக்க போகிறது என அவரது நண்பர்கள் வட்டராம் மூலம் சமுக வலைத்தளங்களில் செய்திகள் தீயாய் பரவி வருகிறது.மேலும் அதில் தான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்ய போகிறார் என்கிறார்கள் அவரது நண்பர்கள்.
இது குறித்து இவர் திருமணம் செய்ய போகும் பெண் கோவாவை சேர்ந்தவர்.இவர்கள் இருவருக்கும் சில வருடங்களாகவே காதலித்து வருவதாகவும்.தனது தம்பியின் திருமணத்தினால் தள்ளி வைத்துள்ள தகவும் செய்திகள் வெளியாகி வருகின்றனர்.மேலும் தம்பிக்கு திருமணம் முடிந்த பிறகு இந்த செய்தியை தனது தாயிடம் கூறி ஒப்புதல் பெற்று விட்டதாகவும் வருகின்ற ஜனவரி மாதம் திருமணத்தை நடத்த போவதாகவும் செய்திகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றனர்.