தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தவர் நடிகை த்ரிஷா.இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர்.இவர் கோலிவுட் துறையில் தனது 1999 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான ஜோடி படம் மூலம் துணை நடிகையாக அறிமுகமாகி உள்ளார்.அதன் பிறகு தமிழ் சினிமாவில் படிபடியாக படங்களின் வாய்ப்பு கிடைத்து அன்று முதல் இன்று வரை தனக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார்.மேலும் அப்போது இருந்த ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக இருந்துள்ளார்.இவர் தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி என கால் தடம் பதிக்காத சினிமா துறைகளே கிடையாது.இந்நிலையில் நடிகை த்ரிஷா அவர்கள் பிரபல தொழிலதிபரை காதலித்து வந்த நிலையில் நிச்சியதார்த்தம் வரை சென்ற நிலையில் அவர்கள் இருவரும் பிரிந்தனர்.வருண் மணியன் என்னும் அவர் பல படங்களை தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் நடிகர் த்ரிஷா அவர்களின் முன்னால் காதலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளார்கள்.இதில் இவர் சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்றை நடித்தி வருகிறார்.மேலும் இதில் சென்னை அயனம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கிண்டி காவல் நிலையத்தில் இவர் மேல் புகார் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறுகையில் வருண் மணியன் நிறுவனத்திடமிருந்து இரண்டு பிளாட்டுகள் வாங்க உள்ளதாகவும் அதற்கான முன் பணம் இரண்டு லட்சம் தொகையை கொடுத்து முன் பதிவு செய்யப்பட்டது.அனால் முழு தொகையையும் கொடுத்து தன்னிடம் தெரிவிக்காமலே அதை இன்னொருவருக்கு விற்றுள்ளார்.
இதனால் கொடுத்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்க இந்த கொரோன காலம் என்பதால் பணம் திருப்பி தர தாமதமாகும் என கூறியுள்ளார்.பின் பணத்திற்காக அலுவுலகம் சென்ற போது அவர் என்னை மிரட்டியுள்ளார் என கூறியுள்ளார்.அனால் போலிஸ் விசாரணையில் வெங்கடேசன் அவர்கள் தன்னிடம் பிளாட் புக் செய்து விட்டு பிறகு ரத்து செய்து விட்டதாக கூறியுள்ளார்.இதனால் வருண் மணியன் மேல் நம்பிக்கை மோசடி,பண மோசடி என மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார்கள் என செய்திகள் வெளியாகி உள்ளனர்.